×

கோரமண்டல் ரயிலில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை: தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்

சென்னை: கோரமண்டல் ரயிலில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். நரகாணி கோபி, கார்த்திக், ரகுநாத், மீனா, கமல், கல்பனா மற்றும் அருண் ஆகியோர் நிலை என்ன என்று தெரியவில்லை. முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த நிலையில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. 7 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். 8012805050, 044-28593990, 9445868943 ஆகிய எண்களில் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

The post கோரமண்டல் ரயிலில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை: தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Koramanthal ,State Emergency Operations Centre ,Chennai ,Naragani Gobi ,Karthic ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து